ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவருடைய படங்கள் ரூ.100 கோடி, ரூ.200 கோடி என அதையும் தாண்டி வசூலை குவித்து வருகின்றன. அப்படிப்பட்ட படங்களில் சல்மான் நடித்திருந்தாலும், பாலிவுட் படங்களை விட மொழிப்படங்கள் தான் பவர்புல்லாக இருப்பதாகவும், அது தான் வசூலிலும் சிறப்பாக இருக்கிறது என்று கூறுகிறார் சல்மான்.
இதுகுறித்து சல்மான் கான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பது தான் நமக்கு தடைகல்லாக இருக்கிறது, இந்ததடை கல்லே ஒருநாள் நமக்கு பெரிய பிரச்னையாக மாறும். ஆனால் போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற மொழிப்படங்களுக்கு இந்த பிரச்னை கிடையாது. தியேட்டரில் டிக்கெட் கட்டணமே ரூ.50 முதல் ரூ.80 வரை தான், அதனால் படத்தின் வசூலும் ரூ.50 கோடி வரை இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் ரூ.250, ரூ.650 சிலசமயங்களில் ரூ.950-க்கு டிக்கெட் விற்றால் கூட படங்களின் வசூல் ரூ.100 கோடி, ரூ.200 கோடி எட்டுவது சிரமமாக உள்ளது. எனவே பாலிவுட் படங்களை விட மொழிப்படங்கள் தான் பவர்புல்லானது என்பது எனது கருத்து என்றார்.