ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக 29 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு, முதல்கட்டமாக அண்மையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி 9 கோடி ரூபாயை திரட்டினார்கள். மீதி தொகையான 20 கோடியை திரட்டுவதற்காக, முன்னணி நடிகர்களை சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடிக்க வைத்து, அவர்களின் சம்பள தொகையை நடிகர் சங்க கட்டிட நிதியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, இரண்டு படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. விஷாலும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். ஜெயம்ரவியும், ஆர்யாவும் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்கின்றனர். விஷால், கார்த்தி நடிக்கும் படத்துக்காக தற்போது மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்கப்பட்டுள்ளது. சுசீந்திரன், திரு, முத்தையா ஆகிய மூவர்தான் அந்த மூன்று இயக்குநர்கள்.
இரண்டு கதாநாயகர்களுக்கு சமமான முக்கியத்துவம் கொண்ட அதிரடி கதையாக இருக்க வேண்டும் என்பதுதான் விஷால் மற்றும் கார்த்தியின் எதிர்பார்ப்பு. இதில் ஒரு கதை விஷால், கார்த்தி இருவருக்கும் மிகவும் பிடித்து விட்டதாக தகவல் அடிபடுகிறது. யார் இயக்குநர் என்பதை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
நடிகர் சங்க இடத்தை சாதாரணமாகப் பார்க்கப்போவதாக இருந்தாலும் மீடியாக்களுக்கு அழைப்புவிடுத்து 50 கேமராக்கள் வந்த பிறகே நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் வருகை தருவார்கள். அப்படிப்பட்ட பாண்டவர் அணியினர் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக உருவாகும் பட அறிவிப்பை பிரஸ் ரிலீஸாகவா கொடுப்பார்கள்? அகில இந்திய மீடியாக்களை அழைத்து பிரம்மாண்ட விழா நடத்தி பட அறிவைப்பை வெளியிட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்த படத்தின் மூலமாக மட்டும் நடிகர் சங்கத்துக்கு குறைந்தபட்சம் 25 கோடி ரூபாய்வரை நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் வரவு செலவு விவகாரத்துக்குப் பிறகே ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கும் படம் பற்றி இறுதி முடிவு எடுப்பார்களாம். தற்போது ஜெயம்ரவி ஏகப்பட்ட படங்களில் நடிக்க அட்வான்ஸை வாங்கிப்போட்டிருக்கிறார். அவற்றை முடிக்கவே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும். எனவே ஜெயம் ரவி ஆர்யா புராஜக்ட் இப்போதைக்கு இல்லை என்பதே லேட்டஸ்ட் தகவல்.