ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெய்யும், அஞ்சலியும் 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பிறகு தற்போது ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்குகிறார். சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன், டி.என்.அருண் பாலாஜி, கந்தசாமி நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இது 1989ம் ஆண்டு பின்னணியில் நடக்கும் திகில் கதை. ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கொடைக்கானலில் நடக்கிறது. இதன் பூஜையும் படப்பிடிப்பும் நேற்று நடந்தது. சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயன் கிளாப் அடிக்க மெட்ராஸ் நந்தகுமார் கேமராவை ஆன் செய்தார்.
ஜெய் உள்பட படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் ஹீரோயின் அஞ்சலி கலந்து கொள்ளவில்லை. அவர் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் கொடைக்கானலில் நடக்கும் படிப்பிடிப்பிற்கு நேரடியாக வந்து கலந்து கொள்வார் என்றும் தயாரிப்பு வட்டாரம் தெரிவித்தது.