ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஓகே கண்மணி' வெற்றிப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார் என் தகவல் பல மாதங்களாக உலவி வருகிறது. இந்நிலையில்தான் இப்போதுதான் இப்படத்தின் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக காஷ்மோரா படத்தில் நடித்து வந்த கார்த்தி அதை முடித்த கையோடு தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார்!
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தில் கார்த்தி பைலட் ஆக நடிக்கிறாராம்! இதற்காக கார்த்தி தற்போது பிரத்தியேக பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. (நடிக்கிறதுக்கு பயிற்சியா? பொய்தானே?) கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 8 -ஆம் தேதி சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஊட்டி, ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. 'ஓகே கண்மணி' வெற்றிப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படம் இது என்பதால் இப்படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதை ஆர்.ஜே.பாலாஜியே தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 'என் கனவு நிஜமாகியுள்ளது. இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான 'வடகறி', 'நானும் ரௌடி தான்' ஆகிய படங்களில் ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.