ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் விஜய், அஜித் உள்ளிட்டோர் இன்னமும் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வராமல் உள்ளனர். அந்த இருவருக்கும் அடுத்து உள்ள சூர்யா கடந்த வருடம் மார்ச் மாதம் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டே வந்தது. தற்போது அவர் 10 லட்சம் தொடர்பாளர்களைப் பெற்றுள்ளார்.
தமிழில் இதற்கு முன் 10 லட்சம் அதற்கு மேற்பட்ட தொடர்பாளர்களை “ரஜினிகாந்த் (3.02 மில்லியன்), தனுஷ் (2.96), சித்தார்த் (2.22), சிவகார்த்திகேயன் (1.85),” ஆகியோர் பெற்றுள்ளார்கள். இந்த மில்லியன் கிளப்பில் சூர்யாவும் தற்போது இணைந்துள்ளார்.
சூர்யாவைத் தொடர்ந்து அவருடைய தம்பி கார்த்தியும் இரண்டு மாதங்களுக்கு முன்பு டிவிட்டரில் கணக்கை ஆரம்பித்தார். ஆனாலும், இவர்களிருவரின் அப்பா நடிகர் சிவகுமார் எப்போதோ ஃபேஸ்புக்கில் செயல்பட ஆரம்பித்தார். அவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் சிவகுமார் திரையுலகம் சார்ந்த பல அரிய தகவல்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார். அதைப் படிப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
விஜய், அஜித் இருவரும் நேரடியாக இந்த சமூக வலைத்தளத்துக்குள் வந்தால், ரஜினி படைத்துள்ள சாதனையை விரைவில் எட்டிப் பிடிப்பார்கள். விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் அதிரடியாக களத்தில் இருப்பவர்கள்.