ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தற்போது புதுச்சேரியில் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரண்பேடி. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு, அரசியல்வாதி, சமூக சேவகர் என பலமுகம் உண்டு. அதோடு, திகார் சிறையில் ஆய்வாளராக இருந்தபோது இவர் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு விருது பெற்றுக்கொடுத்தது. தற்போதைய பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவரே ரோல் மாடலாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது புதுச்சேரியின் கவர்னராகியிருக்கும் கிரண்பேடி, வந்த வேகத்திலேயே அந்த மாநிலத்தை தூய்மையானதாக மாற்றும் பணியில் இறங்கியிருக்கிறார். அதன்ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் புதுச்சேரி அம்பாசிடராக ரஜினி பணியாற்ற வேண்டும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.