ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு 'காண்' படத்தை இயக்க ஆரம்பித்த செல்வராகவன் அந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். இருந்தாலும் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை ஆரம்பித்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி தற்போது அதையும் முடித்துவிட்டார். செல்வராகவனின் இந்த வேகமான பணி குறித்து தமிழ்த் திரையுலகமே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக பட்ஜெட்டை இழுப்பதிலும், ஷுட்டிங் தேதிகளை நீட்டிப்பதிலும் செல்வராகவன் பாணியே தனி என்பார்கள்.
ஆனால், இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருப்பதால் படம் ஆரம்பிக்கும் போதே அனைத்தையும் தெளிவாகப் பேசிவிட்டார் என்கிறார்கள். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததையடுத்து விரைவில் படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாக உள்ளது. இந்தப் படம் செல்வராகவனுக்கு நிச்சயம் வேறு ஒரு பெயரைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.