இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இந்தியாவிலுள்ள கர்நாடக இசைப்பாடகிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முக்கியமானவர். இவர் இந்தியாவில் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தி புகழ் பெற்றவர். 1966-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் பாடினார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்நிலையில், அவரது 100-வது பிறந்த தினத்தை ஐ.நா.சபை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியின்போது ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரியும் நடை பெற உள்ளதாம். அப்போது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவிலுள்ள இசைக்கலைஞர்கள் மட்டுமின்றி அயல்நாடுகளில் உள்ள பிரபல இசைக்கலைஞர்களும் அழைக்கப்பட உள்ளார்களாம்.