ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மகாபிரபு, பகவதி, குத்து, ஏய், வாடா, சண்டமாருதம் என பல ஆக்சன் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தற்போது சொந்த படம் என்றொரு காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். அதோடு நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஏ.வெங்கடேஷ். அங்காடித்தெரு படத்தில் வில்லனாக நடித்த அவர், அதன்பிறகு சட்டப்படி குற்றம், பாகன், இரவும் பகலும், சிவப்பு, கோலிசோடா என பல படங்களில் நடித்தவர் தற்போது பகிரி என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
ஆனால் இதற்கு முன்பு நெகடீவ் ரோல்களிலேயே அதிகமாக நடித்துள்ள ஏ.வெங்கடேஷ், இந்த படத்தில் காமெடியனாக நடித்துள்ளாராம். இதே படத்தில் அவரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் நடிகரான ரவிமரியாவும் ஒரு வேடத்தில் நடித்துள்ளாராம். அதனால் ரவிமரியாவை விட நன்றாக தான் நடித்து விடவேண்டும் என்கிற போட்டி மனநிலையுடன் நடித்தாராம் வெங்க டேஷ்.
இதுபற்றி நடிகர் ரவிமரியா கூறுகையில், ஏ.வெங்கடேஷ்க்கும், எனக்குமிடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. நான் சில படங்களில் நடித்ததைப்பார்த்து விட்டு எனக்கு போன் செய்து பாராட்டுவார். அதேசமயம், நன்றாக நடித்து விட வேண்டும் என்கிற ஆரோக்யமான போட்டியும் இந்த படத்தில் எங்களுக்கிடையே இருந்தது. அதனால் ஒரு காட்சியில் நான் நடித்தால் அதை மறைந்திருந்த பார்த்து விட்டு பின்னர், அவர் நடிக்கும்போது என்னைவிட நன்றாக நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்ததை நானும் ரசித்தேன். அவர் வித்தியாசமான கோணத்தில் நடை நடந்தபடி நடித்தது சிறப்பாக இருந்தது என்கிறார்.