ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1962ம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சில் ஒர் ஆலயம். ஸ்ரீதர் இயக்கியிருந்தார், கல்யாண குமார், தேவிகா, முத்துராமன் நடித்திருந்தனர். வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் “சொன்னது நீ தானா...சொல்..சொல்... என்னுயிரே...” விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் சாகாவரம் பெற்ற பாடல். இந்த பாடலை டி.வியில் அடிக்கடி பார்த்திருப்போம் ஆனால் நிறையபேர் கவனித்திருக்க மாட்டார்கள். இந்த செய்தியை படித்த பிறகு கவனியுங்கள்.
கதைப்படி கல்யாண குமாரும், தேவிகாவும் காதலிப்பார்கள். அந்த காதல் கைகூடாமல் போய்விடும். இருதய நோயால் பாதிக்கப்பட்ட பணக்கார இளைஞர் முத்துராமனுக்கு தேவிகாவை திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முத்துராமனுக்கு சிகிச்சை அளிக்க தேவிகாவின் முன்னாள் காதலர் கல்யாண குமாரே வருவார்.
மருத்துவமனையில் இருக்கும் முத்துராமனுக்கு தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரும், தன் மனைவியும் முன்னாள் காதலர்கள் என்பது தெரியவரும். நோயாளியான அவர் தன், மனைவி தன்னுடன் வேதனை படுவதை விரும்பாமல் அவரது காதலை மன் னதில் வைத்துக் கொண்டு “நீ வேறு திருமணம் செய்து கொள்” என்று கூறுவார். கணவனே தன்னை இன்னொரு திருமணம் செய்து கொள் என்று சொன்ன சொல் வேதனையாக வெளிப்படுவதே “சொன்னது நீ தானா” என்ற பாடல்.
சிதார் இசைகலைஞரான தேவிகா கணவன் சிகிச்சை பெறும் அறையில் அமர்ந்து இந்த பாடலை பாடுவார். 15க்கு 15 அடி அளவிலான அறை, இரண்டு கேரக்டர்கள் பங்கேற்கும் இந்த பாடலில் 60 ஷாட்டுகளை கையாண்டிருப்பார் ஒளிப்பதிவாளர் வின்செண்ட். அப்போது இது பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். இப்போதும் பாருங்கள் ஆச்சர்யமாக இருக்கும்.