ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.பாலசந்தரின் இயக்கத்தில் டூயட் படத்தில் அறிமுகமான
பிரகாஷ்ராஜ் அதன் நினைவாக டூயட்
மூவிஸ் என்ற பட நிறுவனத்தைத்
தொடங்கினார். பல படங்களை தயாரித்து
வந்த பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து நஷ்டம் தான். இரண்டு
ஆண்டுகளுக்கு முன் ‛உன்
சமையல் அறையில்' என்ற படத்தை தயாரித்து
பிரகாஷ்ராஜே இயக்கினார்.
நடிகர்
பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் வெளிவந்த
முந்தைய படங்களைப்போலவே உன் சமையல் அறையில்
படமும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. எனவே, படத் தயாரிப்பை
கைவிட்டுவிட்டு தொடர்ந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்தி
வந்தார் பிரகாஷ் ராஜ். தற்போது
மீண்டும் பட தயாரிப்பில் அவர்
இறங்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் ரீ-மேக் உரிமையை
வாங்கி படங்களை தயாரித்து வந்த
பிரகாஷ் ராஜ், இந்தமுறை கன்னடத்தில்
வெளியாகி வெற்றிபெற்ற 'கோதி பன்னா சாதர்னா மை கட்டு'
என்ற படத்தின் ரீ-மேக் உரிமையை
வாங்கியுள்ளார். அதை தமிழிலும், தெலுங்கிலும்
தயாரித்து இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில்
நடிக்கவும் இருக்கிறாராம் பிரகாஷ் ராஜ்!