மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கவியரசர் கண்ணதாசனின் 89வது பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சில மலரும் நினைவுகள்...
சிவங்கை மாட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன். பெற்றவர்கள் வைத்த பெயர் முத்தையா, வளர்த்தவர்கள் வைத்த பெயர் நாராயணன், அவரே அவருக்கு வைத்துக் கொண்ட பெயர் கண்ணதாசன். கண்ணனை அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணைப்போல தன் வாழ்க்கையிலும் லீலைகள் செய்தவர். காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்ரியா, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி இவரது புணைப்பெயர்கள்.
படித்தது எட்டாம் வகுப்புதான். எட்டு வருட படிப்பிலேயே தமிழ் இவர் ரத்தத்தில் கலந்தது. புலவர் அப்பாதுரையிடம், இலக்கணமும், இலக்கியமும் கற்றார். திருமகள், சண்டமாருதம், திரையலி, தென்றல் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். கிரகலட்சுமி பத்திரிக்கையில் எழுதிய 'நிலவொளியில்'தான் இவர் எழுதிய முதல் கதை. 8 வயதில் “கடைக்கு போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்...” என்ற கவிதை முதல் கவிதை. 'கன்னியின் காதலி' பாடல் எழுதிய முதல் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளில் 5 ஆயிரம் திரைப்பாடல்கள், 4 ஆயிரம் கவிதைகள். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இவர் சாதனை. யேசு காவியமும், அர்த்தமுள்ள இந்து மதமும், வனவாசமும், பாண்டமாதேவியும் தமிழ் உள்ளவரை வாழும் நூல்கள், 'சேரமான் காதலி'க்காக சாகித்ய அகாடமி வாங்கினார். திரைப்பாடலுக்காக பல முறை தேசிய விருது வென்றார்.
சில படங்களில் நடித்தார். சில படங்கள் தயாரித்தார், “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என்று உண்மை பேசினார். “என்னை பின்பற்றாதீர்கள், என் எழுத்துக்களை பின்பற்றுங்கள்” என்றார். “படைப்பதினால் நானும் இறைவன். எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று தத்துவம் பேசினார்.
தயாரித்த படங்கள் அவரது சேமிப்பை சுரண்டியது. அருந்திய மது அவரது ஆரோக்கியத்தை சுரண்டியது. 54 வயதில் பாடுவதையும், மூச்சு விடுவதையும் நிறுத்திக் கொண்டார். ஆனால் அவர் பாடல்கள் உலகில் காற்று உள்ளவரை வாழ்ந்துகொண்டே இருக்கும்.