ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் இருக்கும் மிக திறமையான நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நவாசுதீன், சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் குறிப்பாக ஹீரோவுக்கு இணையாக, சில சமயங்களில் ஹீரோவையே ஓவர்டெக்கு செய்யும் அளவிலான பவர்புல் ரோலில் நடித்து வருகிறார். ‛மஞ்சி - தி மவுன்டெயின் மேன்' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பவர்புல் ரோலில் நடித்திருக்கும் படம் தான் ‛‛ராமன் ராகவ் 2.0''. இப்படம் இந்தவாரம் வெளியாக இருக்கிறது. இப்படம் பற்றியும், இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நவாசுதீன் அளித்த பேட்டி இதோ...
ராமன் ராகவ் 2.0, எந்த மாதிரியான படம்?
இது ஒரு த்ரில்லர் படம். 1960-களில் மும்பையில் வசித்து சுமார் 41 கொலைகள் செய்த சைக்கோ கில்லரான ராமன் ராகவ் பற்றிய படம். ராமன் ராகவ் பற்றி சொன்னாலே மும்பையில் உள்ளவர்கள் பயப்படுவார்களாம், அதுமட்டுமல்ல குழந்தைகள் அவரது பெயரை கேட்டால் அவர்கள் அணிந்துள்ள ஆடையிலே டாய்லெட் போய்விடுவார்களாம், அவ்வளவு ஒரு கொடூரமானவனின் கதை தான் இந்த ராமன் ராகவ் 2.0.
இப்படத்திற்காக உங்களை எப்படி தயார் செய்தீர்கள்?
முடிந்தளவு எனது பெஸ்ட்டை கொடுத்துள்ளேன். ராமன் ராகவ் பற்றி மட்டுமல்ல, சைக்கோ கில்லர் கொலையாளிகள் பலரை பற்றி இணையதளங்களில் தெரிந்து கொண்டேன். சைக்கோ மனிதர்களின் நடை, உடை, பேசும்விதம், கோபம், சிரிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்து கொண்டு, அவர்களைப்போன்று பயிற்சி எடுத்து நடித்தேன். என்னுடைய முந்தைய படங்களின் கேரக்டரை விட இப்படத்தில் எனது பெஸ்ட்டை கொடுத்துள்ளேன், ரசிகர்கள் நிச்சயம் ஏற்பார்கள் என நம்புகிறேன்.
சைகோ த்ரில்லர் ரோலில் இதுவரை நடித்ததில்லை, எதற்காக இந்த ரோலை தேர்வு செய்தீர்கள்?
உண்மை தான். இந்தப்படம் எனக்கு ஒரு புது அனுபவம் தான். இதுவரை நான் நடித்திராத ஒரு ரோல். எப்போதும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால் இந்த ரோலில் நடித்தேன். முன்பெல்லாம் சினிமாவில் காதல் ஹீரோக்கள் என்றால் 20 வருடம் கூட அப்படியே தொடருவார்கள், அதேப்போன்று தான் ஆக்ஷ்ன் ஹீரோக்களும்... ஆனால் இப்போது அப்படியல்ல, நடிகர்கள் வித்தியாசமான ரோலில் நடிக்க நல்ல வாய்ப்பு அமைகிறது. ரசிகர்களும் வித்தியாசமான ரோல்களை ஏற்கிறார்கள்.
சினிமாவில் 15 ஆண்டுகளாக இருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கான வெற்றி தாமதமாகத்தான் கிடைத்துள்ளது. இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன?
1990-களில் இருந்து நான் சினிமாவில் நடித்து வருகிறேன். அப்போது எல்லாம் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் என் நடிப்பை ரசிகர்கள் ஏற்றார்கள். நடிகர்கள் மட்டுமல்ல சினிமாவில் இருக்கும் பெரிய ஸ்டார்களும் பாராட்டினார்கள். டீன் படத்தில் அமிதாப், எனது நடிப்பை பார்த்து பாராட்டினார். அதோடு, ‛நீ தான் உண்மையான நடிகர்' என்றார், அமிதாப் மட்டுமல்ல இன்னும் பல பெரிய நடிகர்கள் அப்படி கூறினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு 10 ஆண்டுக்கு முன்னர் இவர்கள் இப்படி சொல்லியிருந்தால் நிச்சயம் நான் இன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்க முடியாது. என்னைப்பொறுத்த வரை நான் இப்போது தான் எனது சினிமாவில் எனது கேரியரை தொடங்கியுள்ளேன்.
உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?
குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து தனி ஹீரோவாக 4 படங்களில் நடித்துவிட்டேன். இதை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதாக கருதுகிறேன். அடுத்தப்படியாக நான் அலி, பாபுமொசாயே, போட்டோகிராபர் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறேன். இந்தப்படங்கள் எல்லாம் ரொமான்ட்டிக் படங்கள். இதுமட்டுமல்ல ஷாரூக்கானின் ரயீஸ், ஸ்ரீதேவி படம் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறேன். இப்போது பெரிய பேனர்களில் எல்லாம் பட வாய்ப்பு வருகிறது, இருந்தாலும் எனக்கு பிடித்தமான படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
இவ்வாறு நவாசுதீன் சித்திக் கூறினார்.