ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்ச்சைகளின் நாயகன் சல்மான்கான் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். தற்போது அவர் நடித்து வரும் 'சுல்தான்' படத்துக்காக கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிடும்போது “ஒவ்வொரு நாளும் படிப்பிடிப்பில் இருந்து திரும்பும்போது கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை போல சோர்வாக செல்கிறேன்” என்று கூறிருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தது.
பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு வாரத்துக்குள் சல்மான்கான் தன் பேச்சுக்கு வருத்தமும், விளக்கமும் தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டல் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என்ற தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சல்மான்கானின் தந்தை சலீம்கான் மகனின் கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சல்மான்கான் உதாரணத்துக்காக சொன்ன கருத்து மிகவும் தவறானது தான். ஆனால் அவர் சொன்ன நோக்கம் தவறல்ல. இதற்காக சல்மான்கானின் குடும்பத்தின் சார்பிலும், நண்பர்கள் சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வீக இயல்பு. என்று எழுதியுள்ளார்.