மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தென்னிந்திய சினிமாவில், நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 10 ஆண்டுகளாக கதாநாயகியாக நீடித்து வரும் நயன்தாரா, தமிழில், காஷ்மோரா, இருமுகன், திருநாள் உள்ளிட்ட, பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர்கள் சிம்பு, பிரபுதேவாவை தொடர்ந்து, நானும் ரவுடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன், காதல் கொண்டார். இக்காதல் குறித்து, இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
ஆனால், சமீபத்தில், விக்னேஷ் சிவனுடனான காதல் முறிந்ததாக செய்திகள் வெளியாகின. நானும் ரவுடி தான் படத்தை அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும், காத்து வாக்குல இரண்டு காதல் படத்தாலும், நயன்தாரா புதிதாக சொத்து வாங்கிய விவகாரத்தாலும், பிரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த, 63வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நயன்தாரா, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த விருதை விக்னேசிடம் காட்டி பெருமிதப்பட்ட நயன்தாரா, இருவரும் இணைந்த படத்தையும், டுவிட்டரில் வெளியிட்டு, காதல் தோல்வி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.