ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், ‛டார்லிங்' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, பென்சில் படங்களில் நடித்தார். இதில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் ஹிட்டாக அமைய ஜிவி மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் ‛எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வெளியானது. இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இதனிடையே படம் வெளியான இரண்டு தினங்களுக்குள் இப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், ஜிவி பிரகாஷ், இயக்குநர் சாம் ஆன்டன் ஆகியோர் சென்னை கமிஷனரை சந்தித்து, ‛எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிவி பிரகாஷ் குமார், ‛‛சினிமா என்பது ஒருத்தர் சம்பந்தப்பட்ட தொழில் அல்ல, தியேட்டரில் பாப்கான் விற்பவர் கூட அதனால் பயன் அடைவார். படங்கள் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும். படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசும் உதவ வேண்டும் என்றார்.