ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். தற்போது ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். நிருபர்களுக்கு பேட்டி அளித்த அக்ஷய் குமார் கூறியதாவது:
ரஜினியை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. அதற்காக இயக்குனர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினியை என்னிடம் அறிமுகப்படுத்தும்போது இங்கு இவர்தான் சூப்பர் ஸ்டார் என்றார்கள். இங்கு மட்டுமல்ல இந்திய அளவிலேயே அவர்தான் சூப்பர் ஸ்டார். சினிமாவில் மட்டுமல்ல ரியல் சூப்பர் ஸ்டாரும் அவர்தான். இப்போது அவரிடமிருந்து நிறைய கற்று வருகிறேன்.
இதற்கு முன்பு சென்னைக்கு வந்து சில இந்திப் பட படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறேன். இப்போதுதான் அதிக நாள் தங்கியிருக்கிறேன். சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகள். 2.ஓ படத்திற்கு பிறகு அடிக்கடி சென்னை வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்றார்.