சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கன்னட நடிகையான பிரணிதா உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நல்ல அழகும், திறமையும் இருந்தும் அதிக வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அதன்பிறகு சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். பெரிய படம், பெரிய ஹீரோ என்பதால் ஒரு ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் சகுனியின் தோல்வி அவருக்கு மேலும் சறுக்கலாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ் படத்தில் சூர்யாவின் பிளாஷ்பேக்கில் சிறிய கேரக்டரில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அந்த படமும் தோல்வி அடைந்தது அவருக்கு மேலும் சறுக்கலை கொடுத்தது. தமிழில்தான் வாய்ப்பில்லை என்றாலும் கன்னடம் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது 4 வருடத்திற்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ ஜெய். இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஷான் சுதர்சன் தயாரிக்கிறார். மகேந்திரன் ராஜமணி இயக்குகிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.