ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து விமான பணிப்பெண்ணாக பணியாற்றி அதன் பிறகு மீடியா வாழ்க்கை பிடித்து சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சீரியல் நடிகை ஆனவர் ரேஷ்மா. 'வாணி ராணி', 'வம்சம்', 'சுந்தரகாண்டம்' தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 'என் இனிய தோழியே' தொடரில் நடித்து வருகிறார். ரேஷ்மா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரசாத் பசுபலேட்டியின் மகளாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திறமையால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்.
தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில தொடர்களில் முக்கியமான சில கேரக்டர்களுக்கு ரேஷ்மாவை அணுகியபோது மறுத்துவிட்டாராம். “ஹீரோயினாகத்தான் நடிப்பேன். அப்போதுதான் என் முழு கவனமும் கேரக்டரில் இருக்கும், எல்லா எபிசோடிலும் நான் வருவேன். மக்கள் மனதிலும் பதிய முடியும்” என்ற அதற்கு காரணம் சொன்னாராம். இன்னொரு தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.