ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சந்தானம் தான் நடிக்கும் படத்தின் படத்தின் காமெடி பகுதியில் தனக்கென வசனம் எழுத, சீன் பிடிக்க தனி குழு வைத்திருந்தார். இந்த குழுவின் தலைவராக இருந்தவர் மகேந்திர ராஜாமணி. சந்தானத்தின் புகழ்பெற்ற காமெடி பன்ஞ்சுகள் இவர் பேனாவிலிருந்து வந்தவை. 'இனிமே இப்படித்தான்', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றினார். பல வருடங்கள் சந்தானத்திடம் பணியாற்றியவர் இப்போது இயக்குனராகிவிட்டார்.
ஜெய் ஹீரோவாக நடிக்கிறார், ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. கருணாகரன், காளி வெங்கட், நவின், மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இசை புதுமுகம் சந்தோஷ் தயாநிதி. இது முழுநீள காமெடிப் படம். வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.