ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது ராசியான வினியோக நிறுவனமாகவும், தயாரிப்பு நிறுவனமாகவும் இருந்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விரைவில் சுந்தர் .சி இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு' படத்தைத் தயாரித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது. அதோடு, அடுத்தடுத்து பல படங்களையும் வினியோகம் செய்ய உள்ளது.
சுந்தர் .சி இயக்க உள்ள படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வரலாற்று பின்னணியுடன் கூடிய கதையாக உருவாக உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நாயகனாக நடிக்க வைக்க சூர்யாவுடன் பேச்சு வார்த்தை ஆரம்பமாகி இருக்கிறது. அதோடு சூர்யா ஜோடியாக நடிக்க பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகை ஒருவரைத் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறதாம்.
மூன்று மொழிகளில் தயாராக உள்ளதால் கண்டிப்பாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இப்படத்திற்காக 'மகதீரா, பாகுபலி' படங்களின் விஎப்எக்ஸ் மேற்பார்வையாளரான கமலக்கண்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒளிப்பதிவாளராக '24' படத்திற்குப் பணியாற்றி திரு ஒப்பந்தம் செய்யப்படலாம். முன்னணி கலைஞர்களுடன் சுந்தர் .சி பணிபுரிய உள்ள இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படமாக அமைய உள்ளது. விரைவில் படம் பற்றி முறையான அறிவிப்பு வெளியாகலாம்.