ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விமல் நடித்த களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை என கிராமத்து கதைகளே அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதன்காரணமாக கிராமத்து கதைகளுக்கே அவரை இயக்குனர்கள் புக் பண்ணி வந்தனர். இதனால் கிராமத்து நடிகர் என்கிற முத்திரை விமல் மீது விழுந்திருக்கிறது. ஆனால் அந்த மாதிரி கதைகளில் எந்த படத்தில் நடித்தாலும் அவரது நடிப்பு ஒரேமாதிரியாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தற்போது தனது கிராமத்து இமேஜை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விமல்.
குறிப்பாக, வித்தியாசமான நகரத்து வேடங்களை தேடும் அவர், அறிந்தும் அறியாமலும் நவ்தீப் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதுவும் அதிரடியான வில்லனாம். இந்த படத்தில் விமல் அஞ்சான் படத்தில் சூர்யா நடித்தது போன்று ஹேர்ஸ்டைல் மற்றும் காதில் கடுக்கம் அணிந்து நடிக்கிறாராம். இதையடுத்து சில சிட்டி சப்ஜெக்ட்டுகளில் மாறுபட்ட நாயகனாக நடிக்கவும் சீரியசாக கதை கேட்டு வருகிறார் விமல்.