ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அதர்வா நடித்த ஈட்டி படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும், அந்த வெற்றியை அதர்வா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கருத்து திரைப்படத்துறையில் நிலவிவருகிறது. அதற்கு ஏற்றார்போல் தயாரிப்பாளராக களமிறங்கிய அதர்வா 'செம போத ஆகாத' என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். 'பாணா காத்தாடி' படதில் அதர்வாவை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
'செம போத ஆகாத' படத்தை தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அதர்வா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் துவங்குகிறது.
சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் அடிபடுகிறது. அவரை சிபாரிசு செய்தது வேறு யாருமல்ல, அதர்வாவே தான் என்கிறார்கள்.