ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'இறைவி' படம் வெளிவரும் வரை அந்தப் படத்தில் எந்த மாதிரியான கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வைத்திருக்கிறார் என்பது தெரியாமலே இருந்தது. படம் வெளிவருவதற்கு முன்பும் இந்தப் படத்தின் கதையை விமர்சனம் எழுதும் போதும் யாரும் எழுதிவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். அதற்கு என்ன காரணம் என்பது இப்போதுதான் புரிகிறது.
சுஜாதா எழுதிய 'ஜன்னல் மலர்' நாவலின் 'பார்ட்லி இன்ஸ்பிரேஷன்' தான் 'இறைவி' படம் என்பதை படம் முடிந்து 'ரன்னிங் டைட்டில்'-ல் வேகமாக ஓட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதை எதற்கு இத்தனை நாட்களாக மறைத்து, மூடி வைத்திருக்க வேண்டும்.
சுஜாதாவின் 'ஜன்னல் மலர்' நாவல் சிறையிலிருந்து திரும்பி தன்னுடைய மனைவி, குழந்தைகளைத் தேடும் ஒருவரின் கதையாகத்தான் எழுதப்பட்டிருந்தது. அந்த கதையின் நாயகன் தான் 'இறைவி' படத்தில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம். ஆனால், படம் பார்க்கும் போது அனைவருக்குமே எஸ்.ஜே.சூர்யா தான் நாயகனாகத் தெரிவார். பாபி சிம்ஹா வில்லனாகத் தெரிவார். விஜய் சேதுபதி ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவராகத் தெரிவார்.