ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அழகிய தமிழ் மகனைத் தொடர்ந்து மலையாளப்பட டைரக்டர் பரதன் இயக்கத்தில் படத்தில் மீண்டும் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தைப்போலவே இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள். இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி, மைம் கோபி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். முதன்முதலாக விஜய் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் செட் போட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முதல் ஒரு சண்டை காட்சியில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து நெல்லைக்கு யூனிட் இடம்பெயர்ந்து அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறுகிறதாம்.
மேலும், நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படம் அவர்கள் ஏற்கனவே எம்ஜிஆரை வைத்து தயாரித்த எங்கவீட்டு பிள்ளை படத்தை தழுவி எடுக்கப்படுவதாக ஆரம்பத்திலேயே செய்திகள் கசிந்தன. ஆனால் அதை உறுதிபடுத்தும் வகையில் இப்படத்தில் விஜய்யும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதோடு, இப்படத்தின் டைட்டீல் இதுவரை அறிவிக்காதபோதும், இப்போது அப்படக்குழுவை விசாரித்தால் எங்க வீட்டு பிள்ளை என்பதுதான் இந்த படத்தின் டைட்டீல் என்கிறார்கள். விரைவில் இதை முறைப்படி அறிவிப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.