ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சசிகுமார்-வரலட்சுமி நடிப்பில் தாரைத்தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, அதையடுத்து ஐந்து பிரபல ஹீரோக்களை வைத்து குற்றப்பரம்பரை போன்று அதே காலகட்டத்தில் நடந்த இன்னொரு கதையை படமாக்க களமிறங்கினார். அதற்காக விஷால், ஆர்யா, அதர்வா, ராணா உள்பட பல பிரபல நடிகர்களிடமும் கால்சீட் பேசி வந்தார் பாலா. ஆனால் இந்த சேதி பாரதிராஜாவின் காதுக்கு சென்றபோது, தனது குற்றப்பரம்பரை கதையைதான் அவர் இயக்கப்போகிறார் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நான் குற்றப்பரம்பரை கதையை படமாக்கவில்லை. இது வேறு கதை என்று பாலா தெரிவித்தபோதும், குற்றப்பரம்பரை பட பூஜையை அவசரகதியில் நடத்தினார் பாரதிராஜா. அந்த பூஜையில் தன்னை சிலர் விமர்சித்ததாக சொல்லி பின்னர் சென்னையில் பிரஸ்மீட் வைத்து பாரதிராஜாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார் பாலா. அதையடுத்து அந்த பிரச்சினை அடங்கிப்போனது.
இந்த நிலையில், தான் முன்வச்ச காலை பின்வைக்காத பாலா, தான் ஏற்கனவே முடிவு செய்த அதே கதையை படமாக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த கதையில், அவர் விஷால், ஆர்யா, ராணா, அதர்வாவை ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில், இப்போது இன்னொரு ஹீரோவாக அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். தனி ஒருவனுக்குப்பிறகு மாறுபட்ட வில்லனாக அவர் நடிப்பதால் தனது படத்திலும் அவருக்கு ஒரு அழுத்தமான நெகடீவ் வேடம் கொடுக்கிறாராம் பாலா. மேலும், அவர் புக் பண்ணியுள்ள இந்த நடிகர்கள் அனைவருமே பிசியாக நடித்து வருவதால், தனது படத்தை 2017ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறாராம் பாலா.