ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
பாடலாசிரியர் கவி.காளிதாஸ் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தஞ்சையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை தேறி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 66. அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது மகன் பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் வைகப்பட்டுள்ளது. இன்று இறுதி சடங்குகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மூலக்கொத்தலம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
காரைக்குடி அருகில் உள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த கவிஞர் காளிதாஸ் திருப்பத்தூரான் என்ற பெயரில் பக்தி பாடல்கள் எழுதி வந்தார் வைகாசி பொறந்தாச்சி படத்தில் இசை அமைப்பாளர் தேவா சினிமா பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். பெயரையும் காளிதாஸ் என்று மாற்றினார். சுமார் 150 படங்களுக்கும், ஏராளமான பக்தி ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதி உள்ளார்.