ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
“வேந்தர் மூவீஸ்” மதன் ஐந்து பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய “வேந்தர் மூவீஸ்” லெட்டர் பேட்டில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில் “காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்” என்று குறிப்பிட்டு உருக்கமாக எழுதி உள்ளார். வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் எழுதப்பட்டது போன்ற 5 பக்கங்கள் கொண்ட இந்த கடிதம் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மதன் எழுதிய கடிதத்தின் முழு விபரம் : என் நண்பர்களுக்கும், வேந்தருக்கும் மற்றும் என் குடும்பத்தாருக்கும்...ஒரு ஜீரோவில் தொடங்கி, ஒரு ஜீரோவில் முடிகிறது என் வாழ்க்கை. கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணமடைந்தால், அடுத்த ஜென்மம் இல்லை; எனக்கு, அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன்.
என்னிடம், மாணவர் சேர்க்கைக்காக பணம் தந்தவர்களும், என்னை நம்பி சினிமாவில் முதலீடு செய்தவர்களும் பயப்பட வேண்டாம்; பணம் பத்திரமாக உள்ளது. என் வாழ்வில், எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் - வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து, என்னை இந்த உலகுக்கு காட்டியவர் அவரே. என் தலைவருக்காக வாழ்ந்தேன்; தலைவனாலேயே போகிறேன்.
எஸ்.ஆர்.எம்., நிறுவனம், முதலில் வர வேண்டும் என பாடுபட்டேன். மாணவர்கள் கல்லுாரியில் செலுத்தும் பணம் குறைவாக இருந்தாலும், கல்லுாரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும்; இதெல்லாம் எப்படி? என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும் என்பது தான். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்து கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம்.
கல்லுாரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள். எல்லாம் நான் பட்ட உழைப்பு. கட்சி தொடங்கி முதல் மாநாட்டில், வெளி மாநில மாணவர்கள், 100 பஸ்களில் வந்து பங்கேற்றனர். பீகார் தேர்தல், 14 தொகுதியில், ஐ.ஜே.கே., நின்றது. கட்சிக்கான அனைத்து செலவையும் செய்தது நான் தான்; பொய் சொல்லவில்லை.
என்னையும், அய்யாவையும் சிலர் பிரிக்க நினைக்கின்றனர். சொத்தை, என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என, பில்லி சூனியம் வரையில் சென்று விட்டனர். எனக்கு அதை பற்றி கவலையில்லை. ஆனால், கடந்த ஆறு மாதமாக, வேந்தர் அய்யா என்னிடம் பேசுவது இல்லை; தேர்தல் பணிக்கும் அழைக்கவில்லை. அதனால், இந்த முடிவுக்கு செல்கிறேன். இது புதிது இல்லை. நவ., 30ம் தேதியும் முயற்சித்தேன்; முடியவில்லை.
கடைசியாக நான் கேட்பது என்னவென்றால், நான் அனுப்பிய லிஸ்ட் படியே மாணவர்களை கல்லுாரியில் சேர்க்க வேண்டும். அவர்களிடம் வாங்கி பணம் முழுமையாக தரப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் மேல் எந்த கடனும் வரக்கூடாது. இதையும் மீறி என் நண்பர்களையோ, என் குடும்பத்தினரையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார். அய்யா, நான் உங்களை பார்க்காமல் போகிறேன். என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே மதனின் இந்த கடிதம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்த மதனின் மனைவியை நாம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இந்த கடிதம் குறித்து கேட்டோம், அப்போது அவர் வெறும் கண்ணீரை மட்டுமே பதிலாக தந்தார்.