ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வல்லவன் படத்தில் முதன்முதலாக சிம்பு-நயன்தாரா இருவரும் இணைந்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர். அதனால் அதையடுத்து அவர்களை இணைத்து படமெடுக்க நடந்த முயற்சிகள் எல்லாமே தோற்று விட்டன. ஆனால் பல வருடங்களுக்குப்பிறகு டைரக்டர் பாண்டிராஜ் எடுத்த முயற்சி வெற்றிபெற்றது. இது நம்ம ஆளு படத்தில் அவர்களை காதலர்களாகவே நடிக்க வைத்து விட்டார். அந்த படம் நேற்று வெளியாகியுள்ளது.
மேலும், தனது படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, இது நம்ம ஆளு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால் டைரக்டர் பாண்டிராஜ் சில சேனல்களில் தோன்றி படம் குறித்து பேசி வருகிறார். அப்படி அவர் ஒருசேனலில் பேசும்போது, எப்போதுமே நயன்தாரா படப்பிடிப்புத்தளத்துக்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். ஆனால் சிம்பு சில நாட்கள் தாமதமாக வருவார். அவருக்கு முன்பே வந்து மேக்கப்போட்டு விட்டு காத்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, லேட்டாக சிம்பு வரும்போது அவருடன் சண்டை போடுவார். அவரை உரிமையோடு திட்டுவார். ஆனால் அப்படி அவர்கள் திட்டிக்கொண்டதுகூட படத்தின் கதைக்கு தேவைப்பட்டது என்பதால், பின்னர் கேமரா முன்பும் அதே மாதிரி அவர்கள் நடித்தது படத்திற்கும் பெரிய பலமாக இருந்தது என்கிறார் பாண்டிராஜ்.