ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'தில்வாலே', 'பேன்' என தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்துள்ள ஷாரூக்கான், அடுத்தப்படியாக 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை இயக்கிய கெளரி ஷிண்டே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை, புரொடக்ஷ்ன்ஸ் 51 என்ற பெயரிலேயே உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் ஷூட்டிங் முடிந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தீர்மானித்திருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற செப்., 30ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கரண் ஜோகரும், ஷாரூக்கும் பல்வேறு தேதிகளை பரிசீலனை செய்து இறுதியாக செப்.,30ம் தேதியை தேர்வு செய்துள்ளனர். செப்.,30க்கு அடுத்த இரண்டு நாட்களில் காந்தி ஜெயந்தி வருவதால் அந்த விடுமுறையையும் கருத்தில் கொண்டு இந்த தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.