விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தவர் குஷ்பு. சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையான அவர், ரஜினி, கமல் என மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி, தான் காதலித்த டைரக்டர் சுந்தர்.சியை காதலித்து தமிழ்நாட்டு மருமகளாகி விட்டார். அதோடு, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல்வாதியான குஷ்பு, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் உயர்வு பெற்று விட்டார். அவ்வப்போது அரசியல்ரீதியாக ஏதேனும் கருத்துக்கள், தகவல்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது குஷ்புவின் கணவரான சுந்தர்.சி முத்தின முருங்கைக்காய் படத்தில் அரசியல்வாதியாக நடித் திருக்கிறார். கதைப்படி நரைமுடி அரசியல்வாதியாக நடித்த போதும், குஷ்பு போலவே ஆக்டிவான அரசியல்வாதியாக ஆக்டு கொடுத்துள்ள சுந்தர்.சிக்கு, குஷ்புவும் சில அரசியல் டிப்ஸ்களை வாரி வழங்கினாராம். அதன்காரணமாக சுந்தர்.சியின் அரசியல்வாதி கதாபாத்திரம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக மெருகேறியிருக்கிறதாம்.