ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விக்ரம் பிரபு நடிப்பில் இது என்ன மாயம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், அதன்பிறகு ஒரு நாள் இரவில், சில சமயங்களில் ஆகிய படங்களை தயாரித்தார். தற்போது பிரபுதேவா- தமன்னா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் அந்த படத்திற்கு அபிநேட்ரி என்று இந்தியில் பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் தமிழ், தெலுங்கு பதிப்புக்கு காந்தா என்று டைட்டீல் வைத்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தமிழ், தெலுங்கிற்கு இன்னும் தலைப்பே வைக்கவில்லை என்கிறார்கள். மேலும், ஜூன் மாதம் 3-ந்தேதி அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும், அப்போது மூன்று மொழிகளிலும் அந்த படத்திற்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ஏ.எல்.விஜய்.