ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாபி சிம்ஹா பிரபலமாவதற்கு முன்பு பல சிறு படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்றான 'மீரா ஜாக்கிரதை' என்ற படம் வருகிற 27ந் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை, என் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று நடிகர் சங்கத்தில் பாபி சிம்ஹா புகார் அளித்தார். இந்த நிலையில் 'மீரா ஜாக்கிரதை' படத்தின் தயாரிப்பாளர் எம்.அந்தோணி எட்வர்ட், தயாரிப்பாளர் கில்டில் பாபிசிம்ஹா மீது புகார் கொடுத்துள்ளார்.
அதன் சுருக்கம் வருமாறு: மீரா ஜாக்கிரதை படத்தின் இணை இயக்குனராக பணியாற்றிய சதீஷ் என்பவர் தான் பாபி சிம்ஹாவை நடிக்க அழைத்து வந்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். ஒரு நாள் தனது நண்பர் சதீசுடன் மது அருந்திவிட்டு படப்பிடிப்புக்கு வந்தார். போதையில் இயக்குனர் கேசவனை கீழே தள்ளி அடிக்க முயன்றார். அன்று படப்பிடிப்பை நிறுத்திவிட்டு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்த சம்பவத்திற்கு பிறகு இயக்குனர் கேசவன் மனமுடைந்து போனார். படம் முடங்கியதால் எனது பணமும் முடங்கியது.
சிறிது இடைவெளிக்கு பிறகு மீதி படப்பிடிப்பை நடத்தி முடித்து வருகிற 27ந் தேதி படத்தை வெளியிடுகிறோம். இந்த நிலையில் நான் படத்தில் நடிக்கவே இல்லை என்று நடிகர் சங்கத்தில் பாபி சிம்ஹா புகார் அளித்துள்ளார். எனக்கும், எனது கம்பெனிக்கும் களங்கம் விளைக்கும் விதத்தில் நடந்து வருகிறார். 27ந் தேதி எனது படம் வெளிவர முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.