ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் மீண்டும் பரபரப்பாகியிருக்கும் ஐஸ்வர்யா ராய், சரப்ஜித் படத்தை தொடர்ந்து கரண் ஜோகரின் 'ஏய் தில் ஹேய் முஷ்கில்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, பவாத்கான் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தில் ஐஸ்வர்யா-ரன்பீர் இடையே லிப்-டூ-லிப் முத்தக்காட்சி இருப்பதாகவும், அதில் நடிக்க ஐஸ்வர்யா ராய் தயங்குவதாகவும் செய்தி வெளியான நிலையில், இப்போது கரண் ஜோகர், அந்தமுத்தக்காட்சியில் ஐஸ்வர்யாவை நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார். மேலும் அந்த முத்தக்காட்சியை இருவரும் சாக்லேட் உண்பது போன்று மாற்றி படமாக்கியிருக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்தாண்டு தீபாவளியன்று ஏய் தில் ஹேய் முஷ்கில் படம் ரிலீஸாக உள்ளது.