ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சமுத்திரகனி தற்போது 'அப்பா' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் புரமோசனுக்காக சினிமா வி.ஐ.பிக்கள் தங்கள் அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். சினிமாவை தாண்டி சின்னத்திரை தொகுப்பாளர் ரம்யாவும் தன் அப்பா பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
என் அப்பா பற்றிய நிறைய பேசலாம். என்னை ரம்யான்னு கூப்பிடுவதை விட ரம்யா சுப்பிரமணியம் என்று அழைப்பதையே பெருமையாக நினைக்கிறேன். என்னோட அப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அந்த கஷ்டத்தை நாங்கள் படக்கூடாது என்று எங்களை செல்லமாக வளர்த்தார். நாங்கள் கேட்டதெல்லாம் உடனே வாங்கிக் கொடுத்தார். இதை செய், அதை செய்யாதே என்று எங்களுக்கு அறிவுரை சொன்னதே இல்லை. அவர் அதை வாழ்ந்து காட்டுவார் நாங்கள் புரிந்து கொள்வோம். நேரம் தவறாமை, எல்லோரையும் சமமாக மதித்தல், எல்லோரிடத்தும் அன்பு செலுத்துதலை கற்றுக் கொடுத்தார்.
சமீபத்தில் என் வாழ்க்கையில் ஒரு கடுமையான பகுதியை நான் கடந்த போது நான் எடுத்த முடிவு சரியானது தானா, சரியான பாதையில் தான் செல்கிறோமா என்கிற குழப்பத்தில் தவித்தபோது கூட இருந்து எனக்கு வழிகாட்டியவர் அப்பாதான். அவர் இல்லாமல் நான் இல்லை. என்னிடம் யாராவது உங்களுக்கு பிடித்தவர் யார் என்று கேட்டால் அப்பா அப்பா என்று ஆயிரம் முறை சொல்வேன். என்று கூறியுள்ளார் ரம்யா.