ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புலி, வேதாளம் படங்களை முடித்த பிறகு யாரா இந்தி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், அதையடுத்து பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்துக்கொண்டே, சூர்யாவின் எஸ்-3 படத்திலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த இரண்டு படங்களிலும் ஸ்ருதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். அதையடுத்து எஸ்.ஜே.சூர்யா பவன் கல்யாணை வைத்து இயக்கும் படம், தனது தந்தை கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடிக்கிறார்.
ஆனால் இந்த இரண்டு படங்களில் பவன் கல்யாண் படம் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது. கமலின் சபாஷ் நாயுடு ஜூன்-3-ந்தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. என்றாலும், ஆரம்பத்தில் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜீவ்குமார். அதனால், பவன் கல்யாணுடன் நடிக்கும் படத்தை முடித்த பிறகே அப்பா கமலுடன் இணைந்து நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.