சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி குற்றப்பத்திரிக்கை என்ற பெயரில் படமாக எடுத்தார். படம் தயாராகி 14 வருடங்களுக்கு பிறகு வெளிவந்தது. அதன் பிறகு கர்நாடகாவைச் சேர்ந்த இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ், ராஜீவ் கொலையாளிகள் சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருவில் தலைமறைவாக வாழ்ந்ததையும், அவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதையும் மையப்படுத்தி சயனைட் என்ற படத்தை கன்னடத்தில் எடுத்தார். அதே படத்தை குப்பி என்ற பெயரில் தமிழில் வெளியிட்டார்.
இப்போது அதே ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், இதற்கான திட்டம் இலஙங்கையில் உருவான நிகழ்வையும் மையப்படுத்தி மனித வெடிகுண்டு என்ற பெயரில் இயக்க உள்ளார். இதற்காக அவர் கடந்த 2 வருடங்களாக போலீஸ் அதிகாரிகள், ராஜீவ் கொலை விசாரணை அதிகாரிகள், ராஜீவுடன் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோரிடம் நேர்காணல் செய்து தகவல்களை திரட்டியுள்ளார். அதோடு இலங்கைக்கு சென்று அங்கு விடுதலைப்புலிகள் திட்டம் தயாரித்த இடங்களை பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகள், பொதுமக்களையும் சந்தித்து திரும்பி உள்ளார்.
மனித வெடிகுண்டு படம் கன்னடத்தில் அஸ்போட்டா என்ற பெயரிலும், இந்தியில் ஹியூமன் பாம் என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. ராஜீவ், பிறந்த தினமான ஆகஸ்ட் 20ந் தேதி படப்பிடிப்பு தொடங்கி, அவரது நினைவு நாளான மே 21ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார். ராஜீவ்வாக இந்தி நடிகர் ஒருவர் நடிக்கவும், ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் வேடத்தில் நடிக்க அர்ஜுனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் சுனந்தா புஷ்கர் கொலை வழக்கின் சாயலில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி உள்ள ஒரு மெல்லிய கோடு படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.