ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
49ஓ படத்தை அடுத்து கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த படத்தில் படப்பிடிப்புகளுக்கு கேரவன்களை வாடகைக்கு அனுப்பும் ஓனராக நடித்துள்ள அவர், ஒரு அரசியல்வாதியுடன் மோதி, காதலர்களையும் சேர்த்து வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து மதுரை செல்லும் கவுண்டமணி, மதுரை தமிழையும் பேசி நடித்திருக்கிறாராம்.
மேலும், 16 வயதினிலே படம் தொடங்கி இந்த படம் வரை சினிமாவில் கிட்டத் தட்ட 40 ஆண்டுகள் பயணித்து விட்டபோதிலும், இன்னமும் நடிப்பு மீதான ஆர்வம் கவுண்டமணிக்கு துளியும் குறையவில்லையாம். எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 8 மணிக்கெல்லாம் மேக்கப் போட ஆரம்பித்து 9 மணிக்கு முன்பே டைரக்டரிடம் டயலாக் பேப்பரை வாங்கி படிக்கத் தொடங்கி விடுவாராம். பிறகு, அவர் ஆக்சன் சொல்வதற்கு முன்பே கேமரா முன்பு வந்து காத்திருப்பாராம். அந்த அளவுக்கு இத்தனை ஆண்டுகளானபோதும் கவுண்டமணியின் தொழில் ஆர்வமும், பக்தியும் கொஞ்சம்கூட குறையவில்லையாம்