ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பாபி சிம்ஹா அதிகம் புகழ்பெறாத காலத்தில் நடித்த படம் மீரா ஜாக்கிரதை. இந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை என்று நடிகர் சங்கத்தில் அவர் புகார் கொடுத்திருப்பது தனி கதை. இப்போது படத்தை பற்றிய செய்திக்கு வருவோம்.
சில வருடங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் திடீர் என்று ஒரு பெண் உருவம் தோன்றி மறைவதாக சில வாகன ஓட்டிகள் சொன்னது பரபரப்பு செய்திகளாக வெளிவந்தது. இதனை மையமாக வைத்து வசந்தபாலனிடம் உதவியாளராக இருந்த மகேஷ்வரன் உருவாக்கியுள்ள கதை இது. அந்த மர்ம உருவத்தை சில இளைஞர்கள் ஆய்வுக்காக தேடிச் செல்கிறார்கள். அந்த இளைஞர்களில் ஒருவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவம்தான் கதை. அந்த மர்ம உருவமான மீராவாக அழகி மோனிகா நடித்துள்ளார்.
படத்தை ஆர்.ஜி.கேசவன் இயக்கி உள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து இயக்குனராகியிருக்கிறார். ஒயிட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார். வருகிற 27ந் தேதி படம் வெளிவருகிறது.