ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'24' படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் தராததில் சூர்யா மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். ஆனால், இந்தப் படம் தெலுங்கில் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் படத்தை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தைக் கொடுத்து, தமிழ் ரசிகர்கள் விரும்பும்படியான காட்சிகளை வைக்கத் தவறியதுதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தெலுங்கு ரசிகர்கள் சுமாரான புத்திசாலித்தனமான காட்சிகளையும், நகைச்சுவைக் காட்சிகளையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், தமிழ் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதென்பது அவ்வளவு எளிதல்ல என அவருக்குப் புரிய வைத்துள்ளார்கள்.
இதனால் அடுத்து தெலுங்கு இயக்குனரான திரிவிக்ரம் உடன் இணைய உள்ள படத்தை சூர்யா கைவிட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. எங்கே அவரும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மட்டுமே படத்தைக் கொடுத்து விடுவாரோ என சூர்யாவிற்குத் தயக்கம் ஏற்பட்டுள்ளதாம். திரிவிக்ரம் தெலுங்கிலும் முன்னணி இயக்குனர்தான், அவருக்கு சூர்யா இல்லையென்றாலும் பரவாயில்லை, அவரது இயக்கத்தில் நடிக்க பல தெலுங்கு ஹீரோக்கள் எப்போதுமே தயாராக இருக்கிறார்கள். அதனால் நஷ்டம் சூர்யாவுக்குத்தான் என திரிவிக்ரமுக்கு நெருக்கமானவர்கள் தெரிவத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'24' படத்தின் ரிசல்ட் சூர்யாவை நிறையவே யோசிக்க வைத்துவிட்டது போலிருக்கிறது. 'எஸ் 3' படத்திற்குப் பிறகு நடிக்க உள்ள படத்தை மெதுவாகவே தேர்வு செய்யப் போகிறாராம்.