ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெண்களுக்கு எதிரான கருத்துக்களை யாரேனும் பிரபலங்கள் சொல்லி விட்டால் மகளிர் அமைப்புகள் கொடி பிடித்து விடுகிறார்கள். அதோடு, அட்வைஸ் என்ற பெயரில் பெண்கள் நேரம் கெட்ட நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம். நாகரீகம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு விசிட் அடிக்க வேண்டாம் என்று யாரேனும் நல்ல எண்ணத்துடன் சொன்னால்கூட, பெண்ணுரிமையில் கைவைக்கிறார்கள் என்றும் சிலர் கொடி பிடிக்கிறார்கள். ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்போது தனது சார்பில் பெண்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.
அவர் கூறியிருப்பதாவது- இன்று பெண்கள் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பான ஆண்களுடன் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சுதந்திரம் உள்ளது என்று சொல்லிக்கொண்டு நள்ளிரவு நேரங்களில் ஊர்சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி சென்றால் பாதிப்பு பெண்களுக்குத்தான். அதோடு அவர்களை சார்ந்தவர்களும் பாதிக்கப்படுவார் கள். அதனால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்ரீதிவ்யாவின் இந்த கருத்துக்கு இதுவரை மகளிர் அமைப்புகளிடமிருந்து எந்தவித கமெண்ட்சும் வரவில்லை.