ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என வரிசையாக மூன்று படங்களில் நடித்தவர்கள் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகிய இருவரும். இதில் அந்த படங்களோடு கோலிவுட்டை விட்டு காணாமல் போய் விட்டார் பூஜாகுமார். ஆனால் ஆண்ட்ரியா, அதன்பிறகு ராம் இயக்கிய தரமணி படத்தில் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு ஆங்கில பாடலைகூட தானே எழுதி டியூன் போட்டு பின்னணியும் பாடினார். ஆனால் அந்த அளவுகு ஆண்ட்ரியா ஆர்வமுடன் கமிட்டான தரமணி படம் இன்னமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினியாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்த ஆண்ட்ரியா இப்போது அந்த கொள்கையில் இருந்து விடு பட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் கமிட்டாகியிருக்கிறார். முழுக்க முழுக்க வடசென்னை மனிதர்களாக தனுஷ், சமந்தா உள்பட பலர் வாழ்ந்து காட்டயிருக்கும் அப்படம் ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒரு விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். இந்த வேடம் ஆண்ட்ரியாவை பெரிய பர்பாமென்ஸ் நடிகையாக உயர்த்தும் என்கிறார்கள்.