ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சமுத்திரகனி சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரானார். அவர் இதுவரை சமூக பொறுப்பு மிக்க ஆசியர், அரசியல்வாதி, ஊர் தலைவர், போலீஸ் அதிகாரியாக. அண்ணனாக நடித்துள்ளார். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். எல்லா படத்திலும் அவருக்கு மனைவிகள் இருப்பார்கள். முதன் முறையாக அச்சமின்றி படத்தில் அவர் காதலிக்கிறார். அவரது காதலியாக நடித்திருப்பவர் சைவம் படத்தில் அறிமுமாகி இப்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நித்யா.
கதைப்படி சமுத்திரகனி ஒரு போலீஸ் அதிகாரி. அவர் நித்யாவை மனதார காதலிக்கிறார். மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார் நித்யா. ஆனால் கல்வியை வியாபாரமாக்கும் சமூகத்தில் அவரால் தன் காதலியை தகுதிய இருந்தும் மருத்துவம் படிக்க வைக்க முடியவில்லை. ஒரு போலீஸ் அதிகாரியாக அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படத்தின் ஹீரோ விஜய் வசந்தை வைத்து கல்வி வியாபாரிகளை எதிர்ப்பது மாதிரியான கதை என்கிறார்கள். சமுத்திரகனிக்கு டூயட் எதுவும் எதுவும் கிடையாது யதார்த்தமான காதல் எபிசோடாக சமுத்திரகனி, நித்யா எபிசோட் இருக்கும் என்கிறார்கள்.