ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையாவின் மூன்றாவது படம் மருது. விஷால், ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்திருக்கும் மருது திரைப்படம் இம்மாதம் 20 -ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நேற்று இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மருது படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனராம். அந்தளவுக்கு சாதி துவேசமிக்க வசனங்களும், காட்சிகளும் மருது படத்தில் இடம்பெற்றிருந்தனவாம்.
அவற்றை ஆட்சேபித்த தணிக்கைக் குழுவினர் ஒரு சில காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் கட் கொடுத்ததோடு, மருது படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தன்னுடைய சாதி பெருமையை தூக்கிப் பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இயக்குநர் முத்தையாவை தணிக்கை அதிகாரி கண்டித்ததாகவும் தகவல்.
மருதுவுக்கு யு சான்றிதழ் கிடைக்கும் அதை வைத்து வரிவிலக்கு பெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய லைகா நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. லைகாவுக்கு மட்டுமல்ல மருது படத்தின் நாயகனான விஷாலுக்கும் யு/ஏ சான்றிதழ் ஏமாற்றத்தை தந்துள்ளது.