பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
திரைப்படம் தொடர்பான சங்கங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பார்கள். ஆனாலும் சில சங்கங்களும், சில சங்க பிரதிகளும் ஆளும் கட்சிக்கு அல்லது எதிர் கட்சிக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட சங்கங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்தன. திரைப்பட வர்த்தக சபை முதல்வர் ஜெயலலிதான் பிறந்த நாளை அதிகாரபூர்வமாக கொண்டாடியது. தயாரிப்பாளர் சங்கம் அம்மா அன்னதான திட்டத்தை தொடங்கியது.
இப்போது தேர்தல் நேரம்... எந்த சங்கமும் எந்த கட்சிக்கும் நேரடியாக ஆதரவை தெரிவித்ததில்லை. ஆனால் முதன் முறையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அ.தி.மு.கவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. பெப்சி தலைவர் ஜி.சிவா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பெப்சிக்கு கீழ் 24 திரைப்பட சங்கங்கள் உள்ளன. அத்தனை சங்கமும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிப்பதாகத்தான் பொருள். பெப்சி நிர்வாகிகளின் இந்த முடிவுக்கு பல சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் பல சங்கங்கள் அ.தி.மு.கவிற்கோ, தி.மு.கவிற்கோ ஆதரவு தெரிவிக்கலாம் என்று தெரிகிறது.