ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஜிகர்தண்டாவில் வில்லனாக நடித்து தேசிய விருது பெற்றவர் பாபி சிம்ஹா. அதன்பிறகு முழுநேர ஹீரோவாகி விட்ட அவரது கைவசம் பல படங்கள் உள்ளன. என்றாலும், வில்லனாக நடித்தபோது இருந்த பரபரப்பு இப்போது இல்லை. ஆனபோதும் நடித்து வரும் படங்கள் வெளியாகும்போது அந்த பழைய பரபரப்பு மீண்டும் என் பெயரளவில் ஏற்படும் என்கிறார் பாபி சிம்ஹா.
மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் நான் படங்களுக்கேற்ப வெவ்வேறு முகம் காட்டுகிறேன். ஆனால் திரைக்குப்பின்னால் அப்படியல்ல. எப்போதுமே எனக்கு ஒரே முகம்தான். அனைவரிடமும் ஒரேமாதிரியாக குறிப்பாக என்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களிடம் ஈகோ இல்லாமல் பழகுவேன். அவர்கள் எனக்கு ஏற்கனவே பரிட்சயமில்லாதவர்களாக இருந்தால் நானே தேடிப்போய் பேசிப்பழகி நட்பை வளர்த்துக்கொள்வேன்.
அதோடு, திரைக்கு வெளியே நான் எப்போதும் ஜாலியாக இருப்பேன். என்னை சுற்றியிருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பேன். அதனால்தான் என்னை எலலோருக்குமே பிடிக்கும். குறிப்பாக என்னுடன் நடிக்கும் மற்ற ஹீரோக்கள் அனைவருமே எனது நண்பர்கள்தான். அப்படி நடிக்கும்போது ஏற்படும் நட்பு, அதன்பிறகும் தொடர்கிறது. இப்படி எல்லோருக்கும் நல்ல நண்பனாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் பாபி சிம்ஹா.