ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிப்பில் விக்ரம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள '24' படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருப்பதோடு ஐந்துவிதமான கெட்அப்களிலும் தோன்றியுள்ளார். '24' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே, அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் சூர்யா.
'24' படத்திற்காக நிறைய பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களை மட்டுமே உருவாக்கியுள்ள '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம், ஒரு பெரிய படத்தை எடுத்திருப்பது ஒரு மிகப்பெரிய விஷயம்தான். டைம் டிராவல் பற்றிய ஒரு ஃபேன்டஸி படத்தின் கதையை ரொம்பவும் எளிமையமாக விளக்கினார் விக்ரம்குமார். ரசிகர்களின் பார்வைக்கு இப்படத்தின் காட்சிகள் எப்படி காட்டப்படும் என்பதை விளக்குவதற்காக முன்கூட்டியே நிறைய ஹோம்ஒர்க் செய்திருந்தார். இப்படம் சிறப்பாக வருவதற்கு காரணமாக இருந்த என்னுடன் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்!
படத்தில் நான் ஏற்றிருந்த 3 கதாபாத்திரங்களுக்குமே பாராட்டுக்கள் கிடைத்தது ஒரு நடிகனாக எனக்கு மிகவும் நல்ல ஒரு உணர்வைத் தந்திருக்கிறது. இப்படத்தை விரும்பிய ஒவ்வொருவருக்கும் நான் உண்மையாக நன்றி சொல்லிக்கொள்கிறேன், இயக்குனர் விக்ரம்குமார் எப்போதும் சொல்வார்... உங்களுக்காக எங்கள் இதயத்திலிருந்து நாங்கள் ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறோம்... இப்போது எனக்கும், '24' படக்குழுவினருக்கும் உங்களிடமிருந்து குவியும் அன்பையும், பாராட்டுக்களையும் சிரம் தாழ்ந்து பெற்று வருகிறோம். அனைவருக்கும் நன்றி!” என்று படு பவ்யமாக தெரிவித்துள்ளார் சூர்யா.