ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியாவின் முதல் சோம்பி வகை திரைப்படம் மிருதன். ஜெயம் ரவி, லட்சுமிமேனன் நடித்திருந்த இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இமான் இசை அமைத்திருந்தார், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். குளோபல் இன்போடையின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த பிப்ரவரி 19ந் தேதி வெளியான இந்தப் படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. தற்போது இந்தப் படம் கனடாவில் நடபெற இருக்கும் பெஃண்டாசியா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. எந்திரன் படத்திற்கு பிறகு தேர்வாகி இருக்கும் தமிழ் படம் மிருதன்.
இதுகுறித்து ஜெயம் ரவி கூறியதாவது: அன்னையர் தினத்தன்று கனடா திரைப்பட விழாவுக்கு மிருதன் தேர்வான செய்தி கிடைத்தது. அம்மாவிடம் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் என் முதல் படம் இது. கலைக்கு எல்லை இல்லை. நல்ல கலை எங்கும் ரசிக்கப்படும், கொண்டாடப்படும் என்பார்கள். அதை இப்போது உணர்கிறேன். மிருதன் ஹாலிவுட் தரத்திலான படம் என்று மீடியாக்கள் பாராட்டின. அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.