மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பல படங்களில் கதாநாயகன் மற்றும் கேரக்டர் நடிகராக நடித்திருப்பவர் எஸ்.வி.சேகர். தற்போது ஏற்கனவே தான் நாயகனாக நடித்த மணல்கயிறு-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகன் அஸ்வின் சேகர் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்குழுவிலும் இடம்பெற்றுள்ளார் எஸ்.வி.சேகர். அதன்காரணமாக எப்படி படமெடுத்தால் படக்காட்சிகள் சென்சாரின் கத்திரிக்கு இறையாகாமல் தப்பிக்கும் என்பது பற்றி ஒரு புத்தகம்கூட எழுதினார். மேலும், தான் எந்த மேடை ஏறினாலும், தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை முன்வைத்து தனது கருத்தினை பதிவு செய்ய அவர் தவறுவதில்லை.
அதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், சினிமா என்பது ஒரு வியாபாரம் செய்யுமிடம். இங்கே தங்களது வீடு, நிலம்களை விற்று தயாரிப்பாளர்கள் படமெடுக்க வருகிறார்கள். அதனால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை காப்பாற்றும் வகையில் வியாபார நேர்த்தியுள்ள கதைகளை படமாக்க வேண்டும். அதோடு, சென்சார்போர்டின் விதிமுறைகளை தெரிந்திருக்க வேண்டும். அப்படி செய்தால் எந்தெந்த காட்சிகளை வைக்க வேண்டும், வைக்ககூடாது என்பது தெரிந்து விடும். அதன்காரணமாக, படத்தை வெளியிடும் நேரத்தில் மீண்டும் மீண்டும் காட்சிகளை நீக்கிவிட்டு புதிய காட்சிகளை சேர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகாது. இதனால் தயாரிப்பாளரின் பணத்தை மிச்சப்படுத்தலாம். முக்கியமாக சென்சார்போர்டு அதிகாரிகள் என்பவர்கள் சினிமாத்துறையைச்சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் மக்களின் பிரதிநிதியாகத்தான் செயல்படுகிறோம். மக்களுக்கு நல்லதை சொல்லும் காட்சிகளை வைத்துவிட்டு தவறான கருத்தை சொல்லும் காட்சிகளை நீக்க சொல்கிறோம் என்கிறார்.