ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீராம். தற்போது சோலோ ஹீரோவாக பிசியாகிவிட்டார். பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்த பிறகு அவரின் இமேஜ் உயர்ந்து தற்போது 4 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கும் பைசா என்ற படத்தில் குப்பை பொறுக்கும் இளைஞனாக நடிக்கிறார். இது குப்பைகளால் ஏற்படும் தீமைகளை விவரிக்கும் படம். அடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் சகா என்ற படத்திலும், வேலு விஸ்வநாத் என்பவர் இயக்கும் கபே என்ற படத்திலும் நடிக்கிறார். இவைகள் தவிர தரைடிக்கெட் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீராம் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நான் இப்போது ஹீரோவாக நடிக்கிறேன். இதற்காக எனது தாய், தந்தைக்கு நன்றி. அவர்கள்தான் பக்கத்திலிருந்து என்னை உருவாக்கியவர்கள். தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்தாலும் நான்கும் வெவ்வேறு விதமான கதைகள், கேரக்டர்கள்.
பாபநாசம் படத்தில் நடித்த போது கமல் சார் என்னை சேர்மதுரை என்று செல்லமாக அழைப்பார். அந்த படத்தின் கேரக்டர் பெயர் அது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக நினைத்து நடிக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னார். அதை மனதில் வைத்து எனது நடிப்பு பயணத்தை தொடர்கிறேன். நான் நடித்த வஜ்ரம், கமர்கட்டு படங்கள் சரியாக போகவில்லைதான். ஆனாலும் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். படம் வெற்றி தோல்வி, ஆண்டவன் கையிலும், ரசிகர்கள் கையிலும் இருக்கிறது. நான் என் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறேன். என்கிறார் ஸ்ரீராம்.